என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » போலீஸ் ஏட்டு ரவுடிகள் சண்டை
நீங்கள் தேடியது "போலீஸ் ஏட்டு ரவுடிகள் சண்டை"
திண்டுக்கல்லில் இன்று ஏட்டுவுடன் ரவுடிகள் சண்டைபோட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
திண்டுக்கல்:
திண்டுக்கல் நகர் தெற்கு போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணியாற்றி வருபவர் பாண்டி. இவர் இன்று காலையில் நாகல் நகர் பாரதிபுரம் பகுதியில் ரோந்து பணியில் இருந்தார். அப்போது அதே பகுதியை சேர்ந்த வாலிபர் ஏட்டுவிடம் இங்கே ஏன் நின்று கொண்டு இருக்கிறீர்கள் என கேட்டு உள்ளார்.
இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரம் அடைந்த வாலிபர் ஏட்டுவை ஒருமையில் பேசினார். அதன்பின்னர் ஏட்டு பாக்கெட்டில் இருந்த செல்போனை பறித்து அவரை தாக்கி கீழே தள்ளினார். இதனை பார்த்ததும் அக்கம் பக்கம் உள்ளவர்கள் வந்தனர்.
நடந்த சம்பவம் குறித்து போலீஸ் ஏட்டு வாக்கி டாக்கி மூலம் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார். இதனால் மேலும் ஆத்திரம் அடைந்த அந்த வாலிபர் தனது நண்பருடன் சேர்ந்து ஏட்டுவுடன் கட்டிபுரண்டு சண்டை போட்டனர்.
அதற்குள் போலீஸ் நிலையத்தில் இருந்து போலீசார் அங்கு வந்தனர். போலீசாரை கண்டதும் ஒருவர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
மற்றொருவரை போலீசார் மடக்கி பிடித்தனர். விசாரணையில் பிடிபட்டவர் பிரபல ரவுடி ராகவன் (வயது 35) என தெரியவந்தது. கொலை வழக்கில் ஒன்றில் திண்டுக்கல் கோர்ட்டில் ஆஜராவதற்காக திருப்பூரில் இருந்து வந்து உள்ளார்.
பாரதிபுரம் டெப்போ ரோடு பகுதியில் தனது நண்பர் ரங்கன் வீட்டில் தங்கி இருந்தார். ரங்கனும் பிரபல ரவுடி ஆவார். அப்போதுதான் இந்த தகராறு நடந்து உள்ளது. இதனையடுத்து ராகவனை போலீசார் கைது செய்தனர். தப்பி ஓடிய ரவுடி ரங்கனை தேடி வருகிறார்கள்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திண்டுக்கல் நகர் தெற்கு போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணியாற்றி வருபவர் பாண்டி. இவர் இன்று காலையில் நாகல் நகர் பாரதிபுரம் பகுதியில் ரோந்து பணியில் இருந்தார். அப்போது அதே பகுதியை சேர்ந்த வாலிபர் ஏட்டுவிடம் இங்கே ஏன் நின்று கொண்டு இருக்கிறீர்கள் என கேட்டு உள்ளார்.
இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரம் அடைந்த வாலிபர் ஏட்டுவை ஒருமையில் பேசினார். அதன்பின்னர் ஏட்டு பாக்கெட்டில் இருந்த செல்போனை பறித்து அவரை தாக்கி கீழே தள்ளினார். இதனை பார்த்ததும் அக்கம் பக்கம் உள்ளவர்கள் வந்தனர்.
நடந்த சம்பவம் குறித்து போலீஸ் ஏட்டு வாக்கி டாக்கி மூலம் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார். இதனால் மேலும் ஆத்திரம் அடைந்த அந்த வாலிபர் தனது நண்பருடன் சேர்ந்து ஏட்டுவுடன் கட்டிபுரண்டு சண்டை போட்டனர்.
அதற்குள் போலீஸ் நிலையத்தில் இருந்து போலீசார் அங்கு வந்தனர். போலீசாரை கண்டதும் ஒருவர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
மற்றொருவரை போலீசார் மடக்கி பிடித்தனர். விசாரணையில் பிடிபட்டவர் பிரபல ரவுடி ராகவன் (வயது 35) என தெரியவந்தது. கொலை வழக்கில் ஒன்றில் திண்டுக்கல் கோர்ட்டில் ஆஜராவதற்காக திருப்பூரில் இருந்து வந்து உள்ளார்.
பாரதிபுரம் டெப்போ ரோடு பகுதியில் தனது நண்பர் ரங்கன் வீட்டில் தங்கி இருந்தார். ரங்கனும் பிரபல ரவுடி ஆவார். அப்போதுதான் இந்த தகராறு நடந்து உள்ளது. இதனையடுத்து ராகவனை போலீசார் கைது செய்தனர். தப்பி ஓடிய ரவுடி ரங்கனை தேடி வருகிறார்கள்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X